வரலாற்று பிரசித்தி பெற்ற சம்மாந்துறை ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய தீ மித்திப்பு! - Karaitivu.org

Breaking

Post Top Ad

Responsive Ads Here

செவ்வாய், 24 செப்டம்பர், 2024

வரலாற்று பிரசித்தி பெற்ற சம்மாந்துறை ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய தீ மித்திப்பு!

 வரலாற்று பிரசித்தி பெற்ற சம்மாந்துறை ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயத்தின் வருடாந்த தீமிதிப்பு சடங்கு வைபவம் 24ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கதவு திறத்தலுடன் ஆரம்பமாகின்றது.

தொடர்ச்சியாக 10 தினங்கள் சடங்கு இடம்பெற்று , அக்டோபர் மாதம் 03 ஆம் திகதி தீமிதிப்பு வைபவம் நிறைவுபெறவுள்ளது.

சம்மாந்துறை ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயம் மற்றும் காரைதீவு பத்திரகாளியம்மன் ஆலயத்தின் பிரதம பூசகர் குமாரகுலசிங்கம் லோகேஷ் தலைமையில் சடங்கு இடம்பெற இருக்கின்றது .

தினமும் பகல் பூசை 1.00 மணிக்கு ம் ,இரவு பூசை 7 மணிக்கும் இடம்பெற ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது என ஆலய பரிபாலன சபையின் தலைவர் சீனித்தம்பி சுப்பிரமணியம் தெரிவித்தார்.

26ஆம் திகதி வியாழக்கிழமை ஸ்ரீ கோரக்கர் பிள்ளையார் ஆலயத்தில் இருந்து பாற்குடபவனி இடம்பெற இருக்கின்றது.

01 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை முத்துச்சரம் புறத்தில் அம்பாள் எழுந்தருளி வீதியுலா வருகிறார்.

03 ஆம் தேதி வியாழக்கிழமை காலை 6 மணிக்கு மஞ்சள் குளிக்கும் நிகழ்வு இடம் பெற்று தீமிதிப்பு வைபவம் இடம்பெறும் .

கூடவே ,அன்று அன்னதான நிகழ்வும் இடம்பெற இருக்கின்றது.

இறுதியாக 10ஆம் திகதி வியாழக்கிழமை இரவு எட்டாம் நாள் வைரவர் இடும்பன் திருச்சடங்கு இடம்பெறும் என்று ஆலய பரிபாலன சபைத்தலைவர் சீனித்தம்பி சுப்பிரமணியம் தெரிவிக்கின்றார்.


Post Bottom Ad

Responsive Ads Here

Pages