பிரித்தானியாவில் கண்டறியப்பட்ட புதிய வகை வைரஸ், இலங்கையிலும் பரவக்கூடிய அபாயமுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
புதிய வகை தொற்றானது நாட்டிற்குள் பரவுக்கூடிய சந்தர்ப்பம் மிக அதிகளவில் காணப்படுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் இயக்குநர் டொக்டர் ஹரித்த அளுத்கே குறிப்பிட்டார்.
பிரித்தானியாவில் 60 வீதமானோர் புதிய வகை தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
ஐரோப்பிய நாடுகளைத் தவிர ஆசிய நாடுகளிலும் புதிய கொரோனா தொற்று பரவியுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், சிங்கப்பூரிலும் புதிதாக நோயாளர்கள் அடையாளங்காணப்படுவதாக தெரிவித்துள்ளது.